எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்கும் சீன சர்வே குழு
May 28 2020 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறித்து பல்வேறு வேறுபாடுகள் நிலவும் சூழலில், அதன் உயரத்தை மீண்டும் அளவிடும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது.
உலகிலேயே உயரமானதாக சொல்லப்படும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், 8 ஆயிரத்து 848 மீட்டர் என இந்தியா, 1954-ம் ஆண்டு அளவிட்டு கூறியது. அதேநேரம், சிகரத்தின் அளவு 8 ஆயிரத்து 844 புள்ளி நான்கு மூன்று மீட்டர் என சீனா தெரிவித்தது. தாங்கள் எடுத்த கணக்கீட்டைவிட, சீனாவின் கணக்கீடு 4 மீட்டர் குறைவு என நேபாளம் தெரிவித்தது. இதனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு என்பதில் வேறுபாடு நிலவுகிறது.
இந்நிலையில் சிகரத்தை மீண்டும் அளவிடுவதற்கு சீன சர்வே குழு ஒன்று, திபெத் வழியாக நேற்று எவரெஸ்ட்டை அடைந்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு 5-ஜி நிலையங்களை உருவாக்க சீனாவின் 2 நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.