நோய்வாய்பட்டவர்கள் ரயில் பயணம் செய்ய வேண்டாம் : தொற்றை தடுக்க ரயில்வே அமைச்சகம் வேண்டுகோள்
May 30 2020 11:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோயாளிகள் ரயில் பயணங்களை தவிர்க்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே சில பகுதிகளில் ரயில்கள், பேருந்துகள் போன்றவை நிபந்தனைகளுடன் இயக்கப்படுகின்றன. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பயணம் செய்த தொழிலாளர்கள் சிலர் நோய் பிரச்சினை காரணமாக உயிரிழந்திருப்பதால், மேற்கொண்டு அதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க, நோய்வாய்பட்டவர்கள் ரயிலில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தேவையற்ற ரயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.