மஹாராஷ்ட்ராவில் கொரோனாவில் பாதிக்கப்படும் போலீசாரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 114 காவலர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி
May 30 2020 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ராவில் 2 ஆயிரத்து 325 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 114 காவலர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்ட்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 62 ஆயிரத்து 228 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2 ஆயிரத்து 325 போலீசாரும் அடங்குவர். இவர்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
மஹாராஷ்ட்ராவில் ஊரடங்கு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த காவலர்கள், கொரோனா தாக்குதலுக்கு அதிக அளவில் ஆளாகி வருவதாக, அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 114 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.