இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 8 ஆயிரத்து 392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது
Jun 1 2020 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 8 ஆயிரத்து 392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்து 535-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வரும் 30-ம் தேதி வரை, பல்வேறு தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 8 ஆயிரத்து 392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 230 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 1 லட்சத்து 90 ஆயிரத்து 535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 93 ஆயிரத்து 322 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 91 ஆயிரத்து 819 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 5 ஆயிரத்து 394 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.