ஆந்திர தலைமைச் செயலக ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று - ஊழியர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
Jun 1 2020 5:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாளதால் அலுவலகம் உடனடியாக மூடப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது தீவிரமாகி வருகிறது. ஆந்திராவில் பாதிப்பு குறைவாக உள்ள நிலையில், தலைநகர் ஐதராதபாத்தில் தலைமைச் செயலக ஊழியர்கள் 3 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அங்குள்ள 2 Block-களும் உடனடியாக சீல் வைக்கப்பட்டன. தலைமைச் செயலக அலுவலகம் மூடப்பட்டது. மேலும் 2 blockக்குகளிலும் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் தங்களை தனிமைபடுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.