ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 40-வது கூட்டம் வரும் 14-ம் தேதி நடைபெறும் - தேசிய ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டுவது குறித்து ஆலோசிக்க திட்டம்
Jun 1 2020 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தேசிய ஊரடங்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டு மாநில அரசுகள் நெருக்கடியில் உள்ள சூழலில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 40-வது கூட்டம் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 40-வது கூட்டம் காணொலி மூலம் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வரி வருவாய் இழப்பு ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மாநிலங்களுக்கு வரி வருவாய் குறைந்திருப்பதால் வருவாயை அதிகரிக்க, புதிதாக செஸ் வரி விதிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகிவுள்ளது.