18 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Jun 2 2020 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா அச்சுறுத்தலால் ஒத்தி வைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மொத்தம் 55 உறுப்பினர் இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதில் 37 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு கடந்த மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடத்தப்பட இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையில் காலியாக உள்ள 18 இடங்களுக்கான தேர்தல், வரும் 19-ம் தேதி நடைபெறும் என்றும், அன்று மாலை 5 மணிக்கே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.