2021 மார்ச்சில் "ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம்" : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்
Jun 2 2020 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்சில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள திரு. திரு.ராம்விலாஸ் பஸ்வான், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இது வரையில் 17 மாநிலங்கள் இணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது மேலும் ஒடிசா, சிக்கிம், மிசோரம் மாநிலங்கள் இணைந்துள்ளதால், இத்திட்டத்தில் இணைந்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதத்தில் உத்தரகண்ட், நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்கள் இணையும் என எதிர்பார்க்கப்படுவதாக திரு. பஸ்வான் குறிப்பிட்டார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும், இதன்மூலம் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் உணவுப் பொருளை பெற்றுக் கொள்ள முடியும் என்றம் அவர் கூறினார். மேலும், இத்திட்டத்தை நாடு முழுவதும் எந்தவித பிரச்னையும் இன்றி செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் திரு. திரு.ராம்விலாஸ் பஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.