இந்தியா-சீனா இடையே நீடிக்கும் எல்லை பிரச்சனை விவகாரம் - இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் வரும் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டம்
Jun 3 2020 2:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை தீர்க்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் வரும் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்தியா, சீனா இடையே கடந்த 5-ம் தேதி முதல், லடாக் மற்றும் சிக்கிம் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரு எல்லையிலும் சீனப் படைகள் அத்துமீறியதால், பதில் நடவடிக்கையாக, அங்கு இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. போருக்கு தயாராகும்படி, சீன வீரர்களுக்கு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டதாக தகவல் வெளியான நிலையில், இந்தியா-சீனா இடையே சமரசம் செய்துவைக்க தயார் என அமெரிக்கா தெரிவித்தது. அமெரிக்காவின் யோசனையை இரு நாடுகளும் நிராகரித்து, பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண முற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை தீர்க்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் வரும் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும் என ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.