இந்தியாவில் நாளுக்கு நாள் வேகம் எடுக்கும் கொரோனா பரவல் - நாடு முழுவதும் வைரஸ் தொற்றால் 49 காவலர்கள் உயிரிழப்பு
Jun 3 2020 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் வைரஸ் தொற்றால் 49 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை கண்காணிக்கும் பணியில், போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் 5 ஆயிரத்து 791 காவலர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், ஆயிரத்து 73 பேர் அறிகுறிகள் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், Indian Police Foundation தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும், கொரோனாவுக்கு 49 காவலர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அதில் மஹாராஷ்ட்ராவில் மட்டும், 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளது. மஹாராஷ்ட்ராவில், 2 ஆயிரத்து 556 காவலர்களுக்கும், தமிழகத்தில் 400 காவலர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.