புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு
Jun 3 2020 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதாரத்துறை இயக்குநர் திரு.மோகன்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.