புலம்பெயர் தொழிலாளர்களின் கைகளில் நேரடியாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்‍கு வலியுறுத்தல்

Jun 3 2020 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பிரச்சினையால் கடும் பொருளாதார நெருக்‍கடியில் சிக்‍கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்‍கு நேரடியாக பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தேசிய ஊரடங்கால் பாதிக்‍கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து செல்வி மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்‍கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். கற்பனை செய்ய முடியாத இன்னல்களை ஏழை மக்கள் எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களுக்‍கு நேரடியாக பண உதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அவர்களது வங்கி கணக்‍கில் நேரடியாக 10 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நிவாரண நிதியை இதற்காகப் பயன்படுத்தலாம் என்றும் செல்வி மம்தா யோசனை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00