மகாராஷ்ட்ராவின் அலிபாக்‍ அருகே கரையைக்‍ கடந்தது நிசார்கா புயல் - சூறாவளிக்‍ காற்றில் பறந்த கட்டடங்களின் மேற்கூரைகள்

Jun 4 2020 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்மேற்கு அரபிக்கடலில் உருவான 'நிசார்கா' புயல், மஹாராஷ்ட்ராவின் அலிபாக் அருகே கரையை கடந்தது.

அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த நிசார்கா புயல், மும்பைக்கு தெற்கே அலிபாக் பகுதியிலிருந்து இன்று மதியம் கரையை கடக்கத் தொடங்கியது. இதன் காரணமாக, மஹாராஷ்டிர மாநிலத்தின், மும்பை, வடக்கு கொங்கன், பால்கர், தானே, ராய்கட் போன்ற இடங்களில் கனமழை பெய்தது. ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்‍கப்பட்டது. கடலோர பகுதிகளில்​6 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின. 4 மணி நேரம் கரையை கடந்த புயலால், சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் சில கட்டடங்களின் மேற்கூரைகள் தூக்‍கி வீசப்பட்டன.

புயல் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக, கடலோர பகுதிகளில் வசித்துவந்த ஒரு லட்சம் மக்‍கள், பாதுகாப்பான இடங்களுக்‍கு வெளியேற்றப்பட்ட நிலையில், பெருமளவில் சேதங்கள் ஏதும் இல்லை என மஹாராஷ்ட்ரா அரசு தெரிவித்துள்ளது. புனேவில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை நகரம் பாதுகாப்பாக உள்ளதாக கூறியுள்ளது. இருந்தபோதிலும், முழுமையான இயல்புநிலை திரும்பும் வரை மும்பை மக்‍கள்,​ வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்‍கைகளில், தேசிய மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00