கர்ப்பிணி யானை வெடிமருந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் - குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உறுதி
Jun 4 2020 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் கர்ப்பிணி யானையின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே, கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்துக்கு உணவு தேடிச் சென்றது. இதனைப் பார்த்து பயந்த மக்கள், யானையை விரட்ட அன்னாசிப்பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி யானைக்கு உணவாக அளித்துள்ளனர். மனிதர்கள் வழங்கிய உணவை அந்த யானை சாப்பிட்டதும் வாயில் வெடி மருந்து வெடித்தது. இதனால் அந்த கர்ப்பிணி யானைக்கு கடும் வலி ஏற்பட்டது. இதையடுத்து யானை தண்ணீரில் நின்றபடியே உயிரிழந்தது. இந்நிலையில் கர்ப்பிணி யானை இறப்பிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்னாச்சி பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த கொடூர செயலை செய்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்திருந்தார்.