பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் புத்த நினைவுச் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் - இந்தியா கடும் கண்டனம்
Jun 4 2020 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில், புத்த நினைவுச் சின்னங்கள் சேதப்படுத்திய சம்பவத்திற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்ஜித் - பல்திஸ்தான் பகுதியில் உள்ள பாறை சிற்பங்களில், பழமையான புத்த நினைவு சின்னங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. பாறை சிற்பங்களில், புத்த சின்னங்களை மறைத்து, பாகிஸ்தான் கொடி வரையப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் திரு. அனுராக் ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் சேதப்படுத்தப்பட்டுள்ள புத்த சின்னங்களை சீரமைக்க, விரைவில் இந்தியாவிலிருந்து வல்லுனர் குழு செல்ல உள்ளதாகவும், பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள கில்ஜித் - பல்திஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.