கேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள்
Jun 15 2020 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் ஒன்றரை மாதத்தில் பைக் ஒன்றை தயாரித்த 9வது படிக்கும் மாணவனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அர்ஷாத். இவரது தந்தை பைக் மெக்கானிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தன்னுடைய தந்தையின் மெக்கானிக் கடைக்குச் சென்று வரும் அர்ஷாத், அங்குள்ள தேவையற்ற பொருட்களை எல்லாம் சேர்த்து ஒரு பைக்கை உருவாக்கியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அர்ஷாத், இந்த பைக்கை உருவாக்க ஒன்றரை மாதங்கள் எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலில் 50 கி.மீ செல்லும் என அவர் தெரிவித்துள்ளார். சைக்கிள் போன்று காணப்பட்டாலும் எஞ்சின், கியர் எல்லாம் பொருத்தப்பட்ட இந்த பைக்கிற்கு இணையத்தில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.