காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது - மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் விளக்கம்
Jul 7 2020 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ், காற்றின் மூலம் பரவாது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? பரவாதா? என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இந்த சூழலில், 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டது என்றும், காற்றின் மூலம் அது பரவும் என்றும் கூறப்பட்டது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்தது. காற்றின் மூலம் கொரானா வைரஸ் பரவாது என்று கூறியது. இந்த கருத்தை இந்தியாவின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனமான CSIR உறுதி செய்துள்ளது.
கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டவர்கள், தும்மும் போதும், இருமும் போதும் அவர்களிடமிருந்து கொரோனா வைரஸ்கள் சில அடி தூரம் காற்றில் பறந்து சென்று கீழே விழும். இதை வைத்து அது காற்றில் மிதக்கும் தன்மை கொண்டது எனக் கூற முடியாது என CSIR தெரிவித்துள்ளது. காற்றில் பரவும் வைரசுகள், எப்போதும் காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தன்மை கொண்டவை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சின்னம்மை, பெரியம்மை, இன்புளூயன்சா போன்ற வைரசுகளே காற்றில் பரவும் என்றும், கொரோனா காற்றில் பரவாது என்றும் CSIR கூறியுள்ளது.