நாடு முழுவதும் 1.02 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
Jul 7 2020 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் இதுவரை சுமார் ஒரு கோடியே 2 லட்சத்து 11 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்ட்ரா தொடர்ந்து முதலிடத்திலும், தமிழகம் 2-ம் இடத்திலும், டெல்லி 3-ம் இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், அனைத்து மாநிலங்களில் இருந்தும், நேற்றுவரை ஒரு கோடியே 2 லட்சத்து 11 ஆயிரத்து 92 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்காக பரிசோதிக்கபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில், நேற்று மட்டும் 2 லட்சத்து 41 ஆயிரத்து 430 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.