கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது - பிரதமர் மோடி பெருமிதம்
Jul 9 2020 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் வெளிநாடுகள் முதலீடுகள் செய்ய சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற Global 2020 நிகழ்ச்சியில் பிரதமர்மோடி பங்கேற்றுப் பேசினார். கொரோனா தொற்றைத் தடுப்பதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுவதாகக் குறிப்பிட்டார். பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தம் காரணமாக சிறு-குறு தொழில்கள் வளர்ச்சி அடைந்திருப்பதாகவும், விவசாயம் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவித்தார். சமூகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான சவால்களை இந்தியா வெற்றிகரமாக பலமுறை கடந்து வந்திருப்பதாகவும் கூறினார்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததும், உலகின் மற்ற அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.