இந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்
Jul 9 2020 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன், நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று, இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று அவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்டாலும், தேசிய அளவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்றும், மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் தான், கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது என்றும் அமைச்சர் திரு.ஹர்ஷ் வர்தன் கூறினார்.