ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கட்டப்பட்ட 6 பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
Jul 9 2020 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் கட்டப்பட்டுள்ள 6 பாலங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த 6 பாலங்களும் எல்லை சாலைகள் அமைப்பால் சுமார் 43 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக பாலங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.