மத்திய மோதி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை : காங்கிரஸ் துணிவுடன் எதிர்கொள்ளும் - ப.சிதம்பரம்
Jul 9 2020 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய மோதி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை, காங்கிரஸ் துணிவுடன் எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் திரு. ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி. சோனியா காந்தி தலைமையிலான 2 ராஜீவ்காந்தி அறக்கட்டளைகள் மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளைக்கு முறைகேடாக வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ப.சிதம்பரம், மத்திய மோதி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை, காங்கிரஸ் துணிவுடன் எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார். திருமதி. இந்திரா காந்தியும், திரு. ராஜீவ் காந்தியும் அச்சமற்ற வாழ்க்கையை வாழ்ந்ததாகவும், மரணத்தை கூட பயமில்லாமல் எதிர்கொண்டதாகவும் திரு. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்