ரடிவு விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் ‍கொல்லப்பட்டதாக தகவல் - கான்வாய் வாகனத்தை விபத்தில் சிக்‍க வைத்து தப்ப முயன்றபோது போலீஸ் நடவடிக்‍கை

Jul 10 2020 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக் கொல்லப்பட்ட வழக்‍கில் பிடிபட்ட ரவுடி துபே, சுட்டுக்‍கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் பிகுரு கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே, தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து, விகாஷ் துபேவை கைது செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கான்பூர் மாவட்டம் பிகுரு கிராமத்திற்கு 8 பேர் கொண்ட குழு சென்றது. அப்போது காவல்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் டிஎஸ்பி தேவேந்திரா உள்ளிட்ட 8 காவலர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 5 நாட்களாக உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரவுடி விகாஷ் துபே, போலீசாரால் கைது செய்யப்பட்டு இன்று அழைத்து வரப்பட்டார். அவரை அழைத்து வந்த பாதுகாப்பு வாகனம் ஒன்று விபத்துக்‍குள்ளானது. செயற்கையாக விபத்தை ஏற்படுத்தி துபே தப்ப முயன்றபோது சுட்டுக்‍ கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விகாஷ் துபேயிடம் கூட்டாளிகள் இருவர் ஏற்கெனவே போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00