கடும் சுவாச பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு, 'சொரியாசிஸ்' சிகிச்சைக்கான 'இடோலிசுமாப்' ஊசியை பயன்படுத்தலாம் - இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்
Jul 11 2020 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடும் சுவாச பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு, 'சொரியாசிஸ்' சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 'இடோலிசுமாப்' ஊசியை பயன்படுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்வேறு மருந்துகள், சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரேனாவால் பாதிக்கப்பட்டு, சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு 'சொரியாசிஸ்' சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 'இடோலிசுமாப்' ஊசியை பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த ஊசியை பயன்படுத்துவதற்கு முன்பாக, நோயாளியிடமிருந்து எழுத்துப் பூர்வமாக சம்மதம் பெறப்படுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.