ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் கொரோனா முகாம் அமைக்க ஏற்பாடு - கிரிக்கெட் சங்கத்திற்கு கொல்கத்தா போலீசார் கடிதம்
Jul 11 2020 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் கொரோனா முகாம் அமைக்க, கிரிக்கெட் சங்கத்திற்கு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் திரு.அபிஷேக் டால்மியாவுக்கு கொல்கத்தா நகர காவல் ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், காவலர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே, ஈடன் கார்டனில் உள்ள 5 இடங்களை தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள கிரிக்கெட் சங்கம் அனுமதிக்க வேண்டுமென காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.