கொரோனா எதிர்ப்புப் போரில் வெற்றி கண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் - கொரோனா வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாக பெருமிதம்
Jul 12 2020 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக பணியாற்றி வரும் பாதுகாப்பு படையினர் அனைவருக்கும் சல்யூட் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் குர்கிராமில் Khadarpur-ல் மத்திய ஆயுதப்படை போலீசார் நடத்திய அகில இந்திய மரம் வளர்ப்பு முகாமில் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா கலந்து கொண்டு மரம் நட்டார். பின்னர் உரையாற்றிய திரு.அமித்ஷா, இந்தியா போன்றதொரு பெரிய நாட்டில் கோவிட்-19 தொற்று நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவார்கள் என்று பலரும் அச்சம் தெரிவித்த நிலையில், இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக வெற்றிகரமாக நாம் போராடி வருவதை ஒட்டுமொத்த உலகமும் கவனித்து வருவதாக குறிப்பிட்டார். கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக நம்முடைய பாதுகாப்பு படையினர் பெரும் பங்காற்றி வருவதாகவும், மக்கள் உதவியுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக மட்டுமின்றி, கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராகவும், போராடத் தெரியும் என்பதை பாதுகாப்புப்படையினர் நிரூபித்துள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் சல்யூட் செய்வதாகவும், திரு.அமித்ஷா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.