தடை செய்யப்பட்ட பகுதியாக நடிகர் அமிதாப்பச்சன் வீட்டின் வெளியே பேனர் வைப்பு
Jul 12 2020 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர்களது வீட்டை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து வீட்டின் வெளியே பேனர் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாநகராட்சி ஊழியர்கள் அவர்களது வீட்டில் கிருமிநாசினி தெளித்து சீல் வைத்தனர். கொரோனா தொற்று உறுதியான நிலையில், அமிதாப்பும், அவரது மகன் அபிஷேக் கும், நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையொட்டி, மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.