நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று -
Jul 12 2020 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அமிதாப் பச்சனின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும், அவரது மகள் ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.