கேரளாவில் கடத்தப்பட்ட தங்கத்தின் நிறம் சிவப்பு : பா.ஜ.க, தேசிய தலைவர் நட்டா கடும் விமர்சனம்
Jul 13 2020 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் கடத்தப்பட்ட தங்கத்தின் நிறம் சிவப்பு என ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை, பா.ஜ.க, தேசிய தலைவர் திரு. நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், பா.ஜ.க, அலுவலகத்தை நேற்று, டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் பா.ஜ.க தேசிய தலைவர் திரு. நட்டா திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என விமர்சித்தார். தங்கத்தின் நிறம் மஞ்சள்; ஆனால் கேரளாவில் மட்டும் தங்கத்தின் நிறம் 'சிவப்பு' என விமர்சித்த திரு. நட்டா, தங்க கடத்தலில் முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டினார். தென் மாநிலங்களில் பா.ஜ.க,வின் ஓட்டு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருவதாகவும், கேரளாவில் தனது கொடியை நிச்சயம் பா.ஜ.க ஊன்றும் என்றும் திரு. நட்டா தெரிவித்துள்ளார்.