ராஜஸ்தான் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள துணை முதல்வர் சச்சின் பைலட் : பா.ஜ.க-வில் இணையவுள்ளதாக தகவல்
Jul 13 2020 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் முதல்வர் திரு. அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள துணை முதல்வர் திரு. சச்சின் பைலட், இன்று பா.ஜ.க-வில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சருடன் அதிருப்தியில் உள்ள திரு. சச்சின் பைலட், தனது ஆதரவு எம்.எல்,ஏ.,க்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இன்று அவர் பா.ஜ.கவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சச்சின் பைலட் வெளியிட்ட அறிக்கையில், தனக்கு 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாகவும், ராஜஸ்தானில் கெலாட் அரசு, பெரும்பான்மையிழந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜெய்ப்பூரில் அசோக் கெலாட் தன் வீட்டில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் என தெரிவித்துள்ள திரு. சச்சின் பைலட், இதில் தானும், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க, தனக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் இவ்வாறு அறிக்கையில் திரு. சச்சின் பைலட் குறிப்பிட்டுள்ளார்.