அமெரிக்காவிடம் இருந்து 72 ஆயிரம் தானியங்கி எந்திர துப்பாக்கிகளை வாங்குகிறது இந்தியா - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்
Jul 13 2020 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவிடம் இருந்து 72 ஆயிரம் தானியங்கி எந்திர துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் சிக்சாவர் நிறுவனத்திடமிருந்து, 500 மீட்டர் ரேஞ்ச் திறன்கொண்ட 72 ஆயிரம் துப்பாக்கிகளை 647 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம், இந்தியா கொள்முதல் செய்தது. இதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக சுமார் 72 ஆயிரம் தானியங்கி எந்திர துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. லடாக் எல்லையில் சீனா உடன் பதற்றம் நீடித்துவரும் சூழலில், இந்தியா மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.