மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கோரும் வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் உத்தரவு
Jul 13 2020 2:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், ஒவ்வொரு மாநிலத்திலும் இடங்களை நிரப்பும்போது அந்தந்த மாநிலங்களில் இட ஒதுக்கீட்டு கொள்கையின்படி அவற்றை நிரப்ப வேண்டுமென மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகள் உள்ளதாகவும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி 27 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்யும் எனக்கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.