ராஜஸ்தான், டெல்லி, மஹாராஷ்ட்ராவில் வருமான வரித்துறை சோதனை - ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெல்லாட் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை
Jul 13 2020 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் திரு. அஷோக் கெலாட் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் திரு. அஷோக் கெலாட், துணை முதலமைச்சர் திரு. சச்சின் பைலட் இடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளது. தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், திரு. அஷோக் கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் திரு. சச்சின் பைலட் அறிவித்திருந்தார்.
இதனிடையே, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் போன்று ராஜஸ்தானிலும் மாநில அரசை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிப்பதாக திரு. அஷோக் கெலாட் குற்றம்சாட்டினார். இந்நிலையில், ராஜஸ்தான், டெல்லி, மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, ராஜஸ்தானில் முதலமைச்சர் திரு. அஷோக் கெலாட்டின் ஆதரவாளர்கள், மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் திரு. ராஜிவ் அரோரா உள்ளிட்டோர் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.