ராஜஸ்தானிலும், மத்தியப்பிரதேசத்திலும் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளுக்கு ராகுல் காந்தியே பொறுப்பு - பாஜகவின் உமாபாரதி விமர்சனம்
Jul 13 2020 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் தற்போது அரங்கேறி வரும் அரசியல் நிகழ்வுகள் அனைத்திற்கும் ராகுல்காந்தியே பொறுப்பேற்க வேண்டும் என பாஜகவின் உமாபாரதி கூறியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான செல்வி உமாபாரதி ராஜஸ்தான் அரசியல் நிலவரம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறிய அரசியல்நிகழ்வுகளுக்கும், ராஜஸ்தானில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்திதான் பொறுப்பேற்க வேண்டும் என கூறினார். காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர்கள் வளர்வதை ராகுல்காந்தி விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டார். ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் கட்சியில் உயர்பதவிகளைப் பெறும்போது, தான் தனித்துவிடப்படுவோம் என ராகுல்காந்தி அஞ்சுவதாகவும் உமாபாரதி கூறினார்.