வங்கி - தபால் நிலையங்களில் இருந்து 20 லட்சம் ரூபாய்க்கும்மேல் பணம் எடுத்தால் கூடுதல் டிடிஎஸ் வரி செலுத்த வேண்டும் : வருமான வரித்துறை அறிவிப்பு
Jul 13 2020 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கி மற்றும் தபால் நிலையங்களில் இருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் TDS வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, வருமான வரி செலுத்தாத நபராக இருந்தால், தங்களது வங்கி கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை மட்டுமே எந்தவித வரி பிடித்தமும் இல்லாமல், வங்கி மற்றும் தபால் நிலையங்களில் இருந்து பணம் எடுக்க முடியும். 20 லட்சம் முதல் ஒரு கோடி வரை பணம் எடுத்தால் 2 சதவீதமும், ஒரு கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 5 சதவீதமும் வரி பிடித்தம் செய்யப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அதே வேளையில் வருமான வரி செலுத்தும் வாடிக்கையாளராக இருந்து, தங்களது வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை பணம் எடுத்தால் எந்த வித வரி பிடித்தமும் செய்யப்படாது. ஒரு கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 2 சதவீத வரி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.