நாடு முழுவதும் 1.18 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை : ஒரே நாளில் 2.19 லட்சம் பேருக்கு சோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
Jul 13 2020 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் இதுவரை சுமார் ஒரு கோடியே 18 லட்சத்து 6 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்ட்ரா தொடர்ந்து முதலிடத்திலும், தமிழகம் 2-ம் இடத்திலும், டெல்லி 3-ம் இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், அனைத்து மாநிலங்களில் இருந்தும், நேற்றுவரை ஒரு கோடியே 18 லட்சத்து 6 ஆயிரத்து 256 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்காக பரிசோதிக்கபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில், நேற்று மட்டும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 103 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.