மூணாறு நிலச்சரிவில் இதுவரை 42 பேர் உடல்கள் மீட்பு -மழையால் மீட்புப் பணியில் தொய்வு- சிக்கியுள்ள மற்றவர்களின் நிலை குறித்து அச்சம்
Aug 9 2020 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவின் வயநாடு மற்றும் சுகந்தகிரி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு சிறிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.
கேரள மாநிலம் மூணாறு அருகே ராஜமலையில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பலியானவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வயநாடு மற்றும் சுகந்தகிரி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு சிறிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், இரண்டு வீடுகள் சேதமடைந்தன. நிலச்சரிவைத் தொடர்ந்து, அங்கு வசித்துவந்த பழங்குடியினர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.