வரும் 14-ம் தேதி கூடும் ராஜஸ்தான் சட்டப்பேரவை : ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அசோக் கெலாட் கடிதம்
Aug 9 2020 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கூடவுள்ள நிலையில், உண்மையின் பக்கம் நிற்க வேண்டுமென, முதலமைச்சர் திரு.அசோக் கெலாட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திரு.அசோக் கெலாட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு எழுதியுள்ள 3 பக்க கடிதத்தில், ஜனநாயகத்தை காப்பாற்றவும், வாக்காளர்களின் நம்பிக்கையை உறுதி செய்யவும், அவர்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்கள் திருமதி.இந்திரா காந்தி, திரு.ராஜிவ் காந்தி, திரு.வாஜ்பாய் ஆகியோர், தேர்தல்களில் தோல்வியை சந்தித்திருந்தாலும், ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ஒருபோதும் முயன்றதில்லை எனவும், திரு.அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு, பொருளாதார சரிவு என பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள இந்த சூழலில், பா.ஜ.க.வும், சச்சின் பைலட்டும் ஏற்படுத்தியுள்ள இந்த சதி துரதிர்ஷ்டமானது எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதை உணர்ந்து, அனைவரும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் எனவும், திரு.அசோக் கெலாட், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.