மும்பையில் இன்று முதல் மீண்டும் ஒருவாரம் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
Aug 10 2020 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் மீண்டும் பருவமழை தீவிரமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் கடந்த திங்கட்கிழமை முதல் 3 நாட்களாக பெய்த கனமழையால் நகர மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். வரலாறு காணாத மழையால், மும்பை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தன. ரயில் மற்றும் சாலை போக்குவரத்து முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதையடுத்து வியாழக்கிழமை முதல் மழை குறைந்ததால், அம்மாநில மக்கள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மும்பையில் இன்றுமுதல் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை உள்பட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இந்த நிலை ஒரு வார காலத்துக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.