கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43-ஆக அதிகரிப்பு - ஒரே நாளில் 17 உடல்கள் மீட்பு
Aug 10 2020 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43-ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை தேயிலை தோட்டப் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, அதில், மலைத்தோட்ட தொழிலாளர்கள் உட்பட 78 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 12 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கி ஏற்கெனவே 26 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 17 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 43-ஆக அதிகரித்துள்ளது. எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு Red Alert எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பத்தனம்திட்டா, பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு Orange எச்சரிக்கையும், தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.