தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் தென்மேற்குப் பருவமழை - கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் எச்சரிக்‍கை

Aug 10 2020 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்மேற்குப் பருவமழையின் தீவிரத்தால், கேரளாவைத் தொடர்ந்து தற்போது கர்நாடகாவிலும் 7 மாவட்டங்களுக்‍கு சிவப்பு எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக காவிரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்‍கெடுத்து பாய்கிறது. கிருஷ்ணராஜ சாகர், ஹேரங்கி, ஹேமாவதி மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்நிலையில், தக்‌ஷின கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, சிக்கமகளூர், ஹாசன், குடகு மற்றும் ஷிமோகா ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர பகுதிகள், வடக்கு மற்றும் தென் பகுதியின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கர்நாடக இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00