குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா - ட்விட்டர் மூலம் வெளியான தகவல்
Aug 10 2020 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது தனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் திரு.பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.