பத்திரிகையாளர்கள், போலீஸ் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதலை அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது - வன்முறையாளர்கள் மீதான நடவடிக்கை கடுமையாக இருக்கும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டம்
Aug 12 2020 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெங்களூருவில் எம்.எல்.ஏ. வீடு மற்றும் காவல் நிலையத்தை தாக்கிய வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகளை அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்றும் கர்நடாக முதலமைச்சர் திரு.எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரு கலவரம் மற்றும் அது தொடர்பான கைது நடவடிக்கைகள் குறித்து திரு.எடியூரப்பா பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பத்திரிகையாளர்கள், போலீஸ் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூறினார். இதுபோன்ற வன்முறையையும் வதந்தி பரப்புவதையும் அரசு பொறுத்துக்கொள்ளாது என்றும், அதில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். நிலைமை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் திரு.எடியூரப்பா தெரிவித்தார்.