ராஜஸ்தான் அரசியல் குழப்பத்தால் நட்சத்திர ஹோட்டலில் முகாமிட்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் - பிரச்னை முடிவுக்கு வந்ததால் மீண்டும் ஜெய்பூர் நோக்கிப் பயணம்
Aug 12 2020 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தானில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஜெய்சல்மரில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் திரும்பியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சராக இருந்த திரு.சச்சின் பைலட், முதலமைச்சர் திரு.அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், அம்மாநில அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில், கெலாட்டிற்கு ஆதரவு தந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், கடந்த ஒரு மாதமாக ஜெய்சல்மரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். திடீர் திருப்பமாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி ஆகியோரை, திரு. சச்சின் பைலட் டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்த சமரச முயற்சியினால், திரு.சச்சின் பைலட் நேற்று ஜெய்ப்பூர் திரும்பினார். ராஜஸ்தானில் நிலவிய அரசியல் சிக்கல் முடிவுக்கு வந்ததாக கருதப்படும் நிலையில், ஜெய்சல்மரில் தங்க வைக்கப்பட்டிருந்த திரு.அசோக் கெலாட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் இன்று ஜெய்ப்பூர் திரும்பினர். எம்.எல்.ஏ.க்களுக்கு மனக்கசப்பு ஏற்படுவது இயற்கை தான் எனவும், ஆனால் ஜனநாயகத்தை காப்பாற்ற, அதனை பொறுத்துக் கொள்ள வேண்டும் என, திரு.அசோக் கெலாட் தெரிவித்தார்.