ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு : 2 போலீசார் பலி
Aug 14 2020 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு போலீசார் உயிரிழந்தனர். நவ்காம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து, சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை தேடும் பணியில், போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.