2ஜி ஊழல் வழக்கில் சஞ்சய் சந்திரா உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு - இடைக்கால ஜாமின் ரத்து
Aug 14 2020 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2ஜி ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவரும், யுனிடெக் நிறுவனத்தை சேர்ந்தவருமான சஞ்சய் சந்திரா உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரியல் எஸ்டேட் மோசடி விவகாரத்தில் சஞ்சய் சந்திரா, கடந்த 2017-ம் ஆண்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் 750 கோடி ரூபாயை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில், சஞ்சய் சந்திராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை இன்று ரத்து செய்துள்ளது. சரணடைவதற்கு 2 வார கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.