புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Aug 14 2020 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை தற்காலிக மருத்துவமனையாக மாற்றவும், தனியார் மருத்துவ கல்லூரிகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், SUCI கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கோஷங்களை எழுப்பினர்.