கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒடிசா தீவிரம் : தடுப்பு விதிகளை மீறுவோருக்கு சிறை, ரூ.1லட்சம் அபராதம்
Aug 15 2020 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு, சிறை தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அவசர சட்டத்தை இயற்ற, ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
ஒடிசாவில் கொரோனா பாதிப்பு, 52 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 314 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை ஒடிசா அரசு எடுத்து வருகிறது. முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, தொற்றுநோய் தடுப்பு சட்டத்தை திருத்தி, அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு, குறிப்பிட்ட காலம் சிறைத் தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சட்டசபையை கூட்ட முடியாததால், அவசர சட்டம் பிறப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.