ஏமாற்று வேலைகளை தடுக்க குடிமக்கள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு திட்டம்

Aug 15 2020 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெளிநாட்டு பயணங்களை மறைப்பது, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட ஏமாற்று வேலைகளை தடுக்க, குடிமக்கள் அனைவருக்கும், சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இ பாஸ்போர்ட், சர்வதேச விமான போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட உள்ளதாகவும், சோதனை முயற்சியாக சுமார் இருபதாயிரம் அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனை வெற்றியடைவதைப் பொறுத்து, குடிமக்கள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை மற்றும் டெல்லியில், தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம், பிரத்யேக கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு பத்தாயிரம் முதல் இருபதாயிரம் இ-பாஸ்போர்ட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு முதல், நாட்டில் அமைந்துள்ள 36 பார்போர்ட் அலுவலகங்களிலும் இ-பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளன. தற்போது மணிக்கு பத்தாயிரம் இ-பாஸ்போர்ட் மற்றும் நாளொன்றுக்கு ஐம்பதாயிரம் இ-பாஸ்போர்ட் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது, மணிக்கு இருபதாயிரம் மற்றும் நாளொன்றுக்கு ஒரு லட்சம் என வழங்கப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00