ஏமாற்று வேலைகளை தடுக்க குடிமக்கள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு திட்டம்
Aug 15 2020 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிநாட்டு பயணங்களை மறைப்பது, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட ஏமாற்று வேலைகளை தடுக்க, குடிமக்கள் அனைவருக்கும், சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இ பாஸ்போர்ட், சர்வதேச விமான போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட உள்ளதாகவும், சோதனை முயற்சியாக சுமார் இருபதாயிரம் அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனை வெற்றியடைவதைப் பொறுத்து, குடிமக்கள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை மற்றும் டெல்லியில், தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம், பிரத்யேக கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு பத்தாயிரம் முதல் இருபதாயிரம் இ-பாஸ்போர்ட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு முதல், நாட்டில் அமைந்துள்ள 36 பார்போர்ட் அலுவலகங்களிலும் இ-பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளன. தற்போது மணிக்கு பத்தாயிரம் இ-பாஸ்போர்ட் மற்றும் நாளொன்றுக்கு ஐம்பதாயிரம் இ-பாஸ்போர்ட் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது, மணிக்கு இருபதாயிரம் மற்றும் நாளொன்றுக்கு ஒரு லட்சம் என வழங்கப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.