டெல்லியில் எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்
Aug 15 2020 2:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அமைச்சர்கள், டெல்லியில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திரதின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மக்களவை சபாநாயகர் திரு. ஓம்பில்லா, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தேசியக்கொடியேற்றி வைத்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
மத்திய அமைச்சர்கள் திரு. Harsh Vardhan, Jitendra Singh, நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களது இல்லங்களில் தனித்தனியே கொடியேற்றி சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.